Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும்...

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு...

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர்...

ஈரான் போர் : இந்தியாவில்...

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்,...
HomeIndia"சிகை கொற்றன் வ(ந்)து...

“சிகை கொற்றன் வ(ந்)து கண்டா(ன்)”

நாராயணமூர்த்தி, தொல்லியல் ஆய்வாளர்

“சிகை கொற்றன்”

தமிழ் மேல் வன்மத்தையும் வெறுப்பையும் வக்கிரத்தையும் கொட்டி, தமிழன் என்ற போர்வையில் பொதிந்து கொண்டு, சமஸ்கிருதத்தை தமது தாய்மொழியாக உணர்பவர்களுக்கு இந்தப் பதிவு

எகிப்து பிரமிடுகளில் எட்டு முறை எழுதப்பட்டுள்ள சிகை கொற்றன் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் போது வழக்கம் போல எதிர்பார்த்தபடி ‘அது தமிழ் அல்ல. சமஸ்கிருதம்’ என்று உரிமை கொண்டாட வந்து விட்டீர்கள்.தனக்கென ஏதும் இல்லாதவன் தான் அடுத்தவன் சிகை மேல் ஏற விரும்புவான்.

சிகை என தெளிவாக அங்கு எழுதி இருக்கும் போது வம்படியாக அதை சிகா என சொல்லி ஏன் சமஸ்கிருதப் படுத்த வேண்டும்.?

தமிழ் சிகை என்பது குறிப்பாக ஆண்களின் தலைமுடியைக் குறிக்கிறது.

சிகைக்காய் என்பது ஆண்களுக்கும் அரப்பு என்பது பெண்களுக்கும் சங்கநாட்களில் பயன்பாட்டில் இருந்த ஒரு தமிழ்சித்த மருத்துவ மூலிகை.

முடிக்கு பல சொற்கள் தமிழில்/பிங்கல – திவாகர நிகண்டுகளில் கொட்டிக் கிடக்கின்றன.

ஆண் பெண்ணுக்கு பொதுவாக

கதுப்பு

சுரியல்

குழல்

முடி

மயிர்

கொப்பு

சிகழிகை

பின்னகம்

என்றும்

ஆண்கள் முடிக்கு மட்டும்

மயிர்

முடி

உளை

தளை

குழல்

பங்கி

தொங்கல்

நவிர்

கார்

குடுமி

பித்தை

ஓரி

குஞ்சி

சுரியல்

பிச்சம்

சுடிகை

சிகை

என்றும்

பெண்களுக்கு

மை

குழல்

கூழை

குந்தளம்

கூந்தல்

பனிச்சை

வார்

ஐம்பால்

உச்சி

தொங்கல்

கதுப்பு

அளகம்

துஞ்சை

சுருள்

கொண்டை

பின்னல்

சடை

ஓதி

விலோதம்

கோதை

குருள்

குரல்

கூரல்

கொப்பு

மிஞ்சிகம்

தம்மிலம்

முச்சி

குடிலம்

சிகழிகை

என்றும்

கொட்டிக் கிடக்கும் போது கொற்றனின் பெற்றோர் தம் குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் பெயர் இட வேண்டிய அவசியம் இல்லை.

சிகை என்பது தமிழ்ச் சொல்.

அது வடமொழியில் சிகா என கடன் வாங்கப்படுகிறது. கேஷம்

என்பதுதான் அங்குள்ள வடமொழி மயிர்களுக்கு உரிய பெயர்.

சிலை> ஷிலா

எனவும்

கலை> கலா எனவும் வடமொழியில் திரிவதைப் போல சிகை> சிகா எனத் திரிகிறது.

வடமொழி பெயர்ச்சொல்லில் இரண்டாவது /நான்காவது வல்லின எழுத்து வருமேயானால் அது தமிழில் இருந்து கடன் பெறப்பட்டதே.

தமிழ் முகம் வடமொழியில் முக(2)ம் என்றும் தமிழ் நகம் வடமொழியில் நக(2)ம் என்றும் இரட்டிப்பு வல்லின அழுத்த உச்சரிப்பு பெறும்.அதனால்தான் தமிழ் சிகை வடமொழியில் ஷிகா(2) என திரிகிறது.

“பல்மயிர் கொய் கவல்

மேல் விரித்த யாக்கை சிகழிகை செவ்வுளை” என்பது சங்க இலக்கியச் சான்று. (கலித்தொகை

96/8-9)

கொல்லன் தெருவில் ஊசி விற்க வேண்டாம்.

கேசம் என்பதைத் தவிர வேறு சொல் இல்லாத வடமொழி மயிருக்கு ஏன் தமிழ் சிகையை அபகரிக்க ஆசை.?

உண்மையில் அந்தப் பிரமிடுகளில் சமஸ்கிருதம் இல்லை.அது பிராகிருதம்.

அந்தக் குட்டு சீக்கிரம் வெளிப்பட்டு விடும் என்று அஞ்சி அந்த ஷிகா என்ற மயிர் தமிழ் சிகை மேல் ஏறி உட்காரப் பார்க்கிறது..!

வடமொழியில் உள்ள ஷிகா என்பது தமிழ்மொழி சிகையில் இருந்து கடன் பெறப்பட்டதே.

இருப்பவரிடம் இல்லாதவர் கடன் பெறுவது இயல்பானதே.அதை தமிழர்கள் யாரும் பழிப்பதில்லை.ஆனால் கடன் வாங்கி விட்டு நீதான் என்னிடம் இருந்து கடன் பெற்றாய் என்று குதர்க்கமாய் வன்மமாய் வக்கிரமாய் வெறுப்பைக் கக்கும் போது எதிர்வினை ஏற்பட்டு சமஸ்கிருதம் தாக்குதலுக்கு உள்ளாகிறது.

உலகில் உள்ள அனைத்து மொழிகளும் அழகானவையே..

“யாதும் மொழியே யாவரும் கேளிர்.”

ஆனால் எமது பெருமைகளின் மேல் கல் எறிந்தால் வேடிக்கை பார்க்க முடியாது… உங்கள் மொழி எங்களிடம் அடி வாங்குவதை யாம் ரசிக்கவில்லை.எமது பண்பாடு அடுத்தவர் மொழியை அடி(ழி)ப்பதல்ல.

அங்கு எகிப்துக்குச் சென்றவர் ஒரு தமிழர்.அவர்தாய்மொழி தமிழ்.அவர் அவருடைய பெற்றோர்கள் இட்ட தூய தமிழ்ப்பெயரை பொறித்திருக்கிறார்.இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை..? சிகைகொற்றன் என்பதற்கு பதில் ‘பத்ரி’ என்றோ ‘ஷேஷாத்ரி’ என்றோ எழுதி இருந்தால்தான் அது சமஸ்கிருதம் என நீங்கள் உரிமை கொண்டாட முடியும்…?!

spot_img

Continue reading

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச்...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் கொண்டு வந்ததே திமுகதான் : நாடகமாடும் திருமுருகன் காந்தி !

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் அறிவித்தபோது, ஈ.வெ.இராமசாமி நினைத்திருந்தால் நண்பர் இராஜாஜியிடம் நட்பு ரீதியாகவே எடுத்துக்கூறி இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வைத்திருக்கலாம். ஆனால், அதுகுறித்து மூச்சே விடவில்லை பெரியார் இராமசாமி. மாறாக, அந்த அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்த அறிக்கை...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார். தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத்...