HomeIndiaஉலகின் ஆற்றல் வாய்ந்த...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார்.

தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத் தெரிவிக்கிறார். மேலும், பல அமெரிக்க இராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளதாகக் கவலை தெரிவித்துள்ள ராபர்ட் ரைக் இந்தப் போர் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பொருளாதார இழப்பாக நாளொன்றுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் செலவாகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தப் பணத்தை அமெரிக்க மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் பயன்படுத்தியிருக்கலாம். அமெரிக்கர்களுக்கு மருத்துவ சேவை, மலிவு வீடுகள், குழந்தைப் பராமரிப்பு, நல்ல கல்வி போன்ற அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

அவர் முன்வைக்கும் முதன்மையான குற்றச்சாட்டு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காங்கிரஸ் அல்லது மக்களின் பெரும்பான்மையான ஆதரவு இல்லாமல் இந்தப் போரில் ஈடுபட்டுள்ளார் என்பதே. பல கருத்துக்கணிப்புகளின்படி, பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தப் போரை ஆதரிக்கவில்லை என்பதையும் ராபர்ட் ரைக் சுட்டிக் காட்டுகிறார்.

எனவே, இது அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வி என்றும் அவர் கூறுகிறார்.

சரி, அமெரிக்கர்கள் என்ன செய்யவேண்டும் ?!

* அமெரிக்கர்கள் பெரிய அளவில் அமைதியான போராட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

* தேர்தல் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.

* தேர்தல்களில் அதிகமாக வாக்களித்து அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

* சமூகங்களையும் கல்வி நிறுவனங்களையும் அரசின் அழுத்தத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.

மொத்தத்தில், இந்தப் போரின் அழிவுக்கு சரியான தீர்வு ஜனநாயக அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதே என்றும் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார்.

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...