HomeIndiaஅமெரிக்கா எச்சரிக்கை !...

அமெரிக்கா எச்சரிக்கை ! ஈரானின் எதிர்வினை என்ன ?! பதட்ட நிலையில் ஹோர்முஸ் நீரிணை !

முகிந்தன் துரைராஜசிங்கம்

பாரசீக வளைகுடாவின் மிக முக்கியமான பாதையான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரானின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவின் எச்சரிக்கையால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஈரானின் அனுமதியின்றி ஜலசந்தியைக் கடக்க முயன்ற ஒரு பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் மீது ஈரானிய கடற்படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இதில் கப்பல் தீப்பற்றி எரிந்ததைத் தொடர்ந்து, அந்தப் பாதை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து 90% சரிந்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தில் 20% இந்தப் பாதை வழியாகவே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி:

சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

மற்ற நாடுகளின் கப்பல்கள் ஜலசந்திக்குள் நுழைந்தால் அவை “எதிரி நாடுகளின் ஊடுருவலாகக்” கருதப்பட்டுத் தாக்கப்படும்.

இந்த விவகாரத்தில் அதிரடியாகத் தலையிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ஈரான் உடனடியாக ஜலசந்தியை அனைத்து நாடுகளுக்கும் திறந்துவிட வேண்டும். இதற்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்படுகிறது. தவறினால், ஈரானின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் (Power Plants) மீது அமெரிக்க விமானப்படை கடுமையான தாக்குதலை நடத்தும்,” என டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த மோதலால் ஒரு பேரழிவு ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் பல தங்களின் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு ஈரானின் பதிலடி ஏப்ரல் 6-ஆம் தேதி தெரியவரும்

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...