HomeIndiaஈரான் போரின் 27...

ஈரான் போரின் 27 வது நாள் ! என்ன நடக்கிறது ?!

ஈரானுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படையின் போர் 27 வது நாளாக நீடிக்கிறது.

இந்த மாதத் தொடக்கத்தில் புனித ரமலான் மாதம் தொடங்கிய நாளில் ஈரான் மீது முதலில் தாக்குதலை நடத்தியது அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப் படை.

இதையடுத்து சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களின் மீதும் இஸ்ரேல் மீதும் பதில் தாக்குதல் நடத்தியது ஈரான்.

இது தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுக்கு இழப்பையும் உள்நாட்டிலேயே கடும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது.

இஸ்ரேல் நாட்டுக்காக அமெரிக்கா இழப்பதைப் பெரும்பாலான அமெரிக்கர்கள் விரும்பிவில்லை.

இதனால் ஈரானைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது அமெரிக்கா

அதை நிரகாரித்த ஈரான் சில அடிப்படை நிபந்தனைகளை முன்வைத்தது. 1 ஹோர்ர்முஸ் நீரிணையின் அதிகாரம் ஈரான் வசமே இருக்க வேண்டும் என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும். 2. போர் தொடுத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு இழப்பீடு தரவேண்டும். 3. ஈரானின் உரிமைகளை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். 4. ஈரான் மீது எதிர்காலத்தில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படாது என்று உலக நாடுகள் உறுதியளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துத் தொடர்ந்து போராடி வருகிறது.

இருதரப்புக்கும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் கச்சா எண்ணைக்கான பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு அதிகரித்து உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...