ஈரானுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படையின் போர் 27 வது நாளாக நீடிக்கிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் புனித ரமலான் மாதம் தொடங்கிய நாளில் ஈரான் மீது முதலில் தாக்குதலை நடத்தியது அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப் படை.
இதையடுத்து சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களின் மீதும் இஸ்ரேல் மீதும் பதில் தாக்குதல் நடத்தியது ஈரான்.
இது தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுக்கு இழப்பையும் உள்நாட்டிலேயே கடும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது.
இஸ்ரேல் நாட்டுக்காக அமெரிக்கா இழப்பதைப் பெரும்பாலான அமெரிக்கர்கள் விரும்பிவில்லை.
இதனால் ஈரானைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது அமெரிக்கா
அதை நிரகாரித்த ஈரான் சில அடிப்படை நிபந்தனைகளை முன்வைத்தது. 1 ஹோர்ர்முஸ் நீரிணையின் அதிகாரம் ஈரான் வசமே இருக்க வேண்டும் என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும். 2. போர் தொடுத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு இழப்பீடு தரவேண்டும். 3. ஈரானின் உரிமைகளை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். 4. ஈரான் மீது எதிர்காலத்தில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படாது என்று உலக நாடுகள் உறுதியளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துத் தொடர்ந்து போராடி வருகிறது.
இருதரப்புக்கும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் கச்சா எண்ணைக்கான பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு அதிகரித்து உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

