HomeSri Lankaபாட்டுப் பாடுவது பயங்கரவாதமா...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் “ராப் வடிவப்” பாடல்களால் பிரபலம் அடைந்தவர்.

கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார்.

அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik Tok) பக்கத்தில் அவர் அந்தத் திருவிழாவில் பாடிய நான்கு பாடல்களை சிறு சிறு துண்டுகளாகக் கத்தரித்துத் தடை செய்யப்பட விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவு தருவது போலவும் புகழ்வதுபோலவும் பதிவிட்டதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், அது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரானதாகவும் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சங்கீத்சன் நீதிமன்றத்தில் நேர் நிற்க வைக்கப்பட்டு வரும் 17 ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இளம் பாடகர் ஒருவர் அதிலும் TikTok சமூக ஊடகத்தில் பாடல்களைப் பதிவு செய்ததற்குப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்ச்சப்பட்டிருப்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...

நாம் தமிழர் கட்சிப் பெயரை சீமானுக்குக் குருமூர்த்தி வாங்கிக் கொடுத்தாரா ?! 2010 ல் குருமூர்த்தி எங்கே இருந்தார் ?

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் தமிழ்த் தேசியம் என்பது ஏதோ இலங்கைத் தீவின் வடக்கில் தமிழர்களின் பூர்வகுடி நிலத்தில் வாழும் 20 - 30 லட்சம் தமிழர்களுக்கான தேசிய முழக்கம் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் வாழும் 6 கோடித் தமிழர்களுக்கான முழக்கம் மட்டுமல்ல. அது உலகெங்கிலும் வாழும் 15 கோடித் தமிழர்களுக்கான, இனி வரும்காலத்தில் வரும் தலைமுறைகளுக்கான...