Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும்...

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு...

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர்...

ஈரான் போர் : இந்தியாவில்...

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்,...
HomeIndiaஈரான் மீது போர்...

ஈரான் மீது போர் : ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் இரண்டு தீர்மானங்களும் தோல்வி !

ரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடுத்திருக்கும் போர் குறித்து இரண்டுவித வேறுபட்ட கருத்துக்கள் அமெரிக்காவில் நிலவுகின்றன.

குடியரசுக் கட்சி (Republican) ஆதரவு செனட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈரானுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் நடத்தும் போருக்கு ஆதரவாகவும், எதிர்கட்சிகளான ஜனநாயகக் கட்சி (Democratic) பிரதிநிதிகள் போருக்கு எதிராகவும் பிரிந்து நிற்கின்றனர்.

ஈராக், ஆப்கானிஸ்தான், வெனிசுவலே உள்ளிட்ட பல நாடுகளின் மீது போர் என்கிற அடிப்படையில், பொய்களைப் பேசி அமெரிக்கா இழந்த இழப்புகள் ஏராளம் என்றும், போர் அறிவிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை, காங்கிரசுக்குத்தான் அதிகாரம் என்றும் கூறியும் எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மேலும், ஈரான் அமெரிக்காவுக்கு எதிராக எந்த அச்சுறுத்தலும் விடுவிக்கவில்லையென்றும், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லையெனும் நிலையில் இந்தப் போர் தேவையற்றதும், காங்கிரசின் அனுமதி இல்லாமல் நடத்தப்படுவதால் இந்தப் போர் சட்ட விரோதமானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதையடுத்து செனட் மற்றும் மக்கள் பிரதிநிதி அவைகளில் இது தொடர்பாக வாக்கெடுப்புகள் புதன் மற்றும் வியாழனன்று நடைபெற்றன.

அதில், செனட்-ல் 54 க்கு 47 வாக்குகள் என்கிற ரீதியில் டிரம்புக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது. அதேபோல மக்கள் பிரதிநிதிகள் அவையில், 219 க்கு 212 என்கிற அடிப்படையில் டிரம்புக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது. இரு அவைகளிலும் ட்ரம்புக்கு ஆதரவாக குடியரசுக் கட்சி (Republican) உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

ஈரான் மீது ட்ரம்ப் தொடுத்துள்ள போருக்குக் கடிவாளம் போடும் இரண்டு தீர்மானங்களும் தோல்வியடைந்துள்ளன.

எனினும், கடும் எதிர்ப்புகளை மீறித் தொடர்ந்து போரை நடத்துவதால், எந்தப் புள்ளியில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது ? என்கிற பெரும்பாலான அமெரிக்க மக்களின் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டிய நிலையில் அதிபர் ட்ரம்ப் உள்ளார்.

இதற்கிடையில் 7 வது நாளாக இஸ்ரேல் – ஈரான், அமெரிக்கா இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச்...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் கொண்டு வந்ததே திமுகதான் : நாடகமாடும் திருமுருகன் காந்தி !

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் அறிவித்தபோது, ஈ.வெ.இராமசாமி நினைத்திருந்தால் நண்பர் இராஜாஜியிடம் நட்பு ரீதியாகவே எடுத்துக்கூறி இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வைத்திருக்கலாம். ஆனால், அதுகுறித்து மூச்சே விடவில்லை பெரியார் இராமசாமி. மாறாக, அந்த அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்த அறிக்கை...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார். தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத்...