Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும்...

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு...

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர்...

ஈரான் போர் : இந்தியாவில்...

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்,...
HomeIndiaதமிழ்த்தேசியம் காக்க நாம்...

தமிழ்த்தேசியம் காக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பீர் : தமிழ்த்தேசியப் பேரியக்கம் !

தமிழ்த்தேசியம் காக்க வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்க சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 40 ஆண்டுகாலம் தேர்தலைப் புறக்கணிப்பதும், தேர்தல் அரசியலில் பங்கேற்பதுமான நிலைப்பாட்டில் இருந்துவந்தது. இந்நிலையில், முதன் முறையாக வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

தமழ்த்தேசியப் பேரியக்கத்தின் சிறப்புப் பொதுகுழுக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்,

“ஒரு சமூகத்திற்கு அதன் இனம், மொழி, வரலாறு, சமூக ஒழுங்கு ஆகியவற்றை சமகாலத்தில் பாதுகாக்கக்கூடியது அரசியல் ! ஆனால், அந்த அரசியல் தமிழ்நாட்டில் சீரழிந்து கிடக்கிறது. இலட்சியம், நேர்மை, ஒழுக்கம் எவையும் அரசியலுக்குத் தேவையில்லை என்ற நிலை இருக்கிறது.

இவை மட்டுமின்றி, தமிழினத்தின் அடையாளத்தை, தமிழ் மொழியின் வளர்ச்சியை சீர்குலைக்கக் கூடிய வகையில், இந்தியன் – இந்தியத்தேசியம் என்ற வடவர் ஆதிக்க அரசியலும், திராவிட இனம் என்ற அண்டை அயல் இனத்தார் ஆதிக்க அரசியலும் தமிழர்களை தங்கள் இனத்திற்கே எதிரானவர்களாக மாற்றிச் சிதைத்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி நம்முடைய தமிழினம், தமிழர் தாயகம், தமிழர் வரலாறு, தமிழீழத் தமிழர் வீரம் – ஈகம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி, செந்தமிழன் சீமான் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் இல்லை என்ற நிலையிலும், இந்திய அரசுக்குக் கீழ்பட்ட ஒன்றாக இருக்கிறது என்ற நிலையிலும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணித்து வந்தது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழினத்தின் இறையாண்மை மீட்பு என்ற அடிப்படை இலட்சியத்திற்கு மக்கள் எழுச்சிப் போராட்டங்களே இறுதித் தீர்வாக முடியும் என்பதில், இப்போதும் மாற்றமில்லை! தேர்தலில் போட்டியிடுவதில்லை, எந்தக் கட்சியோடும் தேர்தல் கூட்டணி வைப்பதில்லை என்பதை தொடர்ந்து உறுதி செய்கிறது.

அதேவேளை, இறையாண்மை மீட்பு இலட்சியம் நிறைவேறும் வரை வாக்களிப்பைப் புறக்கணிக்க முடியாது என்ற நிலையில், வாக்களிப்பில் பங்கேற்பது என தீர்மானிக்கிறது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், ஆரியத்துவ இந்தியத் தேசியத்திற்கும், திராவிடத்துவத் திரிபுகளுக்கும் எதிராக தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி, தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதென முடிவு செய்கிறது. தமிழ்நாட்டு மக்கள், நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் வைக்கிறது !

இவ்வாறு தீர்மான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Continue reading

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச்...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் கொண்டு வந்ததே திமுகதான் : நாடகமாடும் திருமுருகன் காந்தி !

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் அறிவித்தபோது, ஈ.வெ.இராமசாமி நினைத்திருந்தால் நண்பர் இராஜாஜியிடம் நட்பு ரீதியாகவே எடுத்துக்கூறி இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வைத்திருக்கலாம். ஆனால், அதுகுறித்து மூச்சே விடவில்லை பெரியார் இராமசாமி. மாறாக, அந்த அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்த அறிக்கை...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார். தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத்...