HomeSri Lankaதியாக தீபம் திலீபன்...

தியாக தீபம் திலீபன் நினைவு நாளை ஒட்டி இளையராஜாவின் ஆஸ்திரேலியா இசை நிகழ்ச்சியின் தேதியை மாற்றக் கோரி வேண்டுகோள் !

இசைஞானி இளையராஜா அவர்களின் ஆஸ்திரேலிய இசை நிகழ்ச்சியின் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என உலகத் தமிழர்களின் உணர்வுகளை முன்வைத்து வேண்டுகோள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2026 செப்டம்பர் 26 அன்று இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாள் தமிழீ*ழப் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுவதால், நிகழ்ச்சியின் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபன், தமிழர் அரசியல் உரிமைகள் மற்றும் நீதிக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்.

அவருடைய நினைவு நாள் உலகம் முழுவதும் வாழும் பல தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்படுவதாக அந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர் வரலாற்று நினைவுகளையும் சமூக உணர்வுகளையும் மதிக்கும் வகையில், செப்டம்பர் 26 அன்று நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியின் தேதியை மாற்றி அமைப்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கோரிக்கை இசைஞானி இளையராஜா அவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கோரிக்கை விடுத்துள்ள தரப்பினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

spot_img

Continue reading

அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம்; 4,000 கோயில் குடமுழுக்கு; குவிந்த தங்கக் கட்டிகள் !!

"தமிழ் ஊடகம் குழுமம்" சொன்னதை திமுக ஆய்வுக்குழு உறுதி செய்தது ! அறநிலையத்துறையில் சேகர் பாபு ஆடிய ஆடக் கூடாத ஆட்டம் ! 3,000 கிலோ தங்கம் ; 4,000 கோயில் குடமுழுக்கு ; குவிந்த தங்கக் கட்டிகள் நேர்மையான அதிகாரிகளைப் பந்தாடிய முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ! மீட்கப்பட்ட தமிழர் கோயில் இடங்களைத் தெலுங்கர்களுக்கு குத்தகை விட்ட...

தமிழ்த் தேசியத்திற்கு முதல் மரியாதை செலுத்திய பாரதிராஜாவுக்கு நாம் தமிழர் கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்திய சீமான் !

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிப்பயணத்தின்போது தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் கொடி போர்த்தி புகழ் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்த்திரையுலகின் தன்னிகரில்லாத கலைஞன் பாரதிராஜா. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்த் தேசியத்தின்மீதும் அளவில்லாப் பற்றுக் கொண்டிருந்தவர். தமிழ்த்தேசிய விடுதலை பெறுவதற்கான 30 ஆண்டுகாலப் போராட்டம் நடத்திய மேதகு...

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பிணையில் வெளிவரலாம் : இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகே

இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…! சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. குறித்த...