HomeTamil Naduவேளாண் மக்களின் வாழ்வில்...

வேளாண் மக்களின் வாழ்வில் இடி இறக்கிய 5700 ஏக்கர் பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டம்! நிறுத்திவைத்தது விஜய் அரசு !? சீமானின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி !

சென்னைக்கு அருகே வேளாண் நிலம், ஏரி, கிணறு உள்ள 5700 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி வானூர்தி நிலையம் ஒன்றை அமைக்க அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

ஏற்கனவே மீனம்பாக்கத்தில் வானூர்தி நிலையம் இருந்தும் அங்கு போதுமான வானூர்திகள் இல்லாத நிலையில் எதற்காக மற்றுமொரு வானூர்தி நிலையம், அதிலும் வேளாண் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கட்டப்படவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் அம்மக்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து போராடி வந்தனர்.

தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும் தேர்தலுக்கு முன்னதாக அந்தப் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.

இந்நிலையில், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, அந்தப் பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தை “சிறப்புத் திட்டமாக” மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிவித்திருந்தது.

தேர்தல் முடிவுற்று, விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் அத்திட்டம் குறித்து இந்த அரசு என்ன முடிவு எடுக்கும் என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், அத்திட்டத்தைக் கைவிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

இதுவரை கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிறப்புப் பொருளாதாரத் தொழிற் பூங்கா அமைக்கலாமா என்றும் அரசு தரப்பில் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகிவில்லை.

எனினும், அத்திட்டம் கைவிடப்பட்டால் அதற்கு மூல காரணம் நாம் தமிழர் கட்சியின் தொடர் போராட்டங்களே. சீமானின் இயற்கைக்கு ஆதரவான முழக்கங்களே.

spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...