HomeIndiaமண்ணுக்கான - வேளாண்மைக்கான...

மண்ணுக்கான – வேளாண்மைக்கான அரசியல் பேசும் சீமான் ! சிவன்மலை உத்தரவுப் பெட்டியில் ஏர்க் கலப்பை, மண், மண் கலயத்தில் நீர் !

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள அருள்மிகு சிவன்மலை ஆண்டவர் தலத்தில் கடந்த 29 ம் தேதி ஏர்க் கலப்பை, மண், மண் கலயத்தில் நீர், பிரம்பு ஆகியவை உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டது.

சிவன்மலை உத்தரவுப்பெட்டி என்பது பத்தர்களின் கனவில் வரும் தகவல் அடிப்படையில், கோயில் அர்ச்சகர்கள் முருகப்பெருமானிடம் “பூ” கேட்டு உறுதி செய்து கனவில் கண்ட பொருட்களை வைக்கும் காட்சிப் பெட்டி ஆகும்.

இந்தப் பெட்டியில் இவ்வாறு வைக்கப்படும் பொருட்கள் தொடர்புடைய நிகழ்வுகள் நாட்டில் நடைபெறும் என்பதே சிவன்மலை பத்தர்களின் நம்பிக்கை மற்றும் அனுபவமாக இருக்கிறது.

அந்தவகையில் கடந்த 29 ம் தேதியன்று மண், மண் கலயத்தில் நீர் மற்றும் ஏர்க்கலப்பை வைக்கப்பட்டுள்ளது.

இது வேளாண்மை சார்ந்த ஏதோ ஒரு பெரிய நிகழ்வு அல்லது மாற்றம் குறித்த ஒரு குறீயிடு என்றபோதும், தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் நிலையில் மண், மண் கலயத்தில் நீர் மற்றும் ஏர்கலப்பை ஆகியவை நாம் தமிழர் கட்சியின் கொள்கை மற்றும் சின்னத்தைக் குறிப்பதாக சிலர் கருதுகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்பதே மண்ணுக்கான அரசியல், நீருக்கான அரசியல், வேளாண் மக்களுக்கான அரசியல் என்பதால் இந்தப் பொருட்கள் பொருந்திப் போகின்றன என்றும் ஆட்சி அதிகாரத்தை பிரம்பு குறிப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

இது வேளாண் தொடர்பானதா அல்லது அரசியல் மாற்றம் தொடர்பானதா என்பது நாளை மே 4 ம் தேதி வாக்குகள் எண்ணப் பட்டால் தெரிந்துவிடும்..

சிவன்மலை சித்தர் சிவவாக்கியர் ஐக்கியமான மலை என்பது குறிப்பிடத்தக்கது. சிவவாக்கியர் நிறுவிய முருகன் தலம் இது என்பதால் சிவன்மலை என்றே வழங்கப்படுகிறது.

பார்ப்போம்.

spot_img

Continue reading

சீமான் குறித்து அவதூறு பரப்புவோர் அனைவரின் ஒரே இலக்கு…மேதகு தலைவர், புலிக்கொடி, தமிழ்த் தேசியம் மூன்றையும் சீமான் கைவிடவேண்டும் என்பதே ! – என்றால் இவர்கள் யாருடைய கைக்கூலிகள் ?!

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது. கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு படம், கருத்துக்களை பகிராமல் இருந்திருந்தால் முகநூல் வருவாய் மாதம்தோறும் கணிசமான அளவு வந்திருக்கும். ஆனால் . கடந்த 16 ஆண்டுகளாக...

நாம் தமிழர் கட்சியின் தோல்விக்குக் காரணங்கள்…வாய்க்கு வந்ததை அள்ளிவிடும் சமூக ஊடகர்கள்!

01. சீமான் மக்களைத் திட்டிட்டார் அதனால் தோத்துப்போச்சு 02. திரள் நிதி வாங்கிட்டாங்க அதனால தோத்துப்போச்சு 03. சாட்டை துரைமுருகன் விஜய் குறித்து பேசியிருக்கக் கூடாது 04. பெரியாரை சீமான் பேசியிருக்க கூடாது அதனால் தோத்துப்போச்சு 05. பிராமண கடப்பாரைன்னு சொல்லிருக்கக் கூடாது அதனால தோத்துப்போச்சு 06. ஈ*ழத் தமிழர் நல்லதுக்கு ஒண்ணுமே செய்யலை அதனால தோத்துப்போச்சு 07. காளியம்மாளை வெளியேற்றி இருக்க...

சீமானும் நாம் தமிழரும் எதிர்த்த நாசகாரத் திட்டங்களின் அத்தனை கதவுகளையும் திறக்கப்போகிறார் விஜய் ?! விஜயை “இயக்கும்” பெரும் கார்பொரேட் நிறுவனங்களின் பேயாட்டம் !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் தமிழ்நாட்டின் மண், மரம், மாடு, காடு, கடல், ஏரி, வேளாண் நிலம், ஆறு, நதி காக்கத் தொடர் போராட்டம் நடத்தி சமரசம் இல்லாமல் குரல் கொடுத்து வந்தவர் சீமான். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு தேர்தலிலும் இதற்காகவே தனியாகப்...