-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
தமிழ்நாட்டின் மண், மரம், மாடு, காடு, கடல், ஏரி, வேளாண் நிலம், ஆறு, நதி காக்கத் தொடர் போராட்டம் நடத்தி சமரசம் இல்லாமல் குரல் கொடுத்து வந்தவர் சீமான்.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு தேர்தலிலும் இதற்காகவே தனியாகப் பெரும்பணத்தை ஒதுக்கி அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி செய்வார்கள்.
ஆனால், இந்த முறை விஜயின் ஒட்டுமொத்த கட்சி செயல்படுகளுக்கும், அரசியல் நகர்வுகளுக்கும் மொத்தமாக “நிதி” அளித்து பின்னாலிருந்து தவெகவை இயக்கியிருக்கிறார்கள் இந்தப் பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்கள்.
இவர்களின் பணம்தான் தண்ணீராக விஜய் வாய்க்கால் வழியாக கரை புரண்டு ஓடுகிறது.
தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியாமல் தத்தளித்த இந்தப் பெரும் கார்பொரேட் நிறுவனங்களே விஜயின் வெற்றிக்குப் பெருமளவில் உதவியிருக்கிறார்கள்.
இதன் காரணமாக அந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களின் வியாபார வணிகச் சந்தைக் கடையை பெரிய அளவில் திறக்கவிருக்கிறார்கள்.
ஏற்கனவே அதானியின் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது நாம் தமிழர்.
குறிப்பாக அப்பகுதியில் எளிய மக்களின் வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நாம் தமிழர் போராட்டங்களால் பெருமளவு தடைபட்டது.
ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை “சிறப்புத் திட்டமாக” அதிகார பூர்வமாக அனுமதித்தது.
இதன் காரணமாக நிலங்களை எளிதாகக் கையகப்படுத்த இயலும். மேலும் மிக விரைவாக அந்தத் திட்டம் நிறைவேறும்.
திமுக ஆட்சியிலும் திட்டங்களை சிரமப்பட்டே நிறைவேற்ற வேண்டியிருப்பதால் மாற்று அரசு ஒன்றை இந்தப் பெரு நிறுவனங்கள் – கார்பொரேட்டுகள் திட்டமிட்டனர்.
அவர்களின் தேர்வுதான் நடிகர் விஜய்.
இந்த கார்ப்பொரேட்டுகள் நிதி வழங்கும் பல மில்லியன் டாலர் மதிப்புடைய நிதியாளர்கள். இவர்களுக்குப் பின்னணியில் இந்திய அரசின் ஒரு “சக்தியும்” அதற்குப் பின்னணியில் இந்திய – இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் “சக்தியும்” அதன் பின்னணியில் ஜியோனிஸ்டுகளும் என ஒரு பெரிய வலைப் பின்னல் கூட்டமைப்பு உள்ளது. அதன் பொம்மலாட்டப் பொம்மைதான் நடிகர் விஜய்.
தமிழ்நாட்டில் திராவிட முகமூடி மற்றும் தமிழ்த் தேசிய அரசியலை உடைக்க வேண்டும் என்பதில் பாஜக – காங்கிரஸ் இரண்டுக்கும் துளியளவு வேறுபாடு இல்லை. இரண்டு இராட்சத முதலைகளும் எப்போதும் இதற்காகவே வாயைத் திறந்து கொண்டு காத்திருக்கின்றன.
இவர்களின் மூளையாக செயல்படுவதுதான் இந்திய – இலங்கை கூட்டு அரசியல் மூளையும் அதன் தாய் மூளையான இஸ்ரேலிய ஜியோனிஸ மொசாட்டும்.
தலை சுற்ற வைக்கும் இந்த அரசியல் சதுரங்க நகர்வுகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து தொடர்ந்து பார்ப்போம் !

