Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும்...

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற...

ஈரான் போர் : இந்தியாவில்...

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்,...

கொங்குச் சோழர்களின் 800 ஆண்டுகள்...

- தொல்லியல் ஆய்வறிஞர் வெ.நாராயணமூர்த்தி திண்டுக்கல் - திருப்பூர் மாவட்ட எல்லையில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ளது கரியபிரான் கோயில். இக்கோயில்...
HomeIndiaஉலகின் ஆற்றல் வாய்ந்த...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார்.

தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத் தெரிவிக்கிறார். மேலும், பல அமெரிக்க இராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளதாகக் கவலை தெரிவித்துள்ள ராபர்ட் ரைக் இந்தப் போர் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பொருளாதார இழப்பாக நாளொன்றுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் செலவாகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தப் பணத்தை அமெரிக்க மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் பயன்படுத்தியிருக்கலாம். அமெரிக்கர்களுக்கு மருத்துவ சேவை, மலிவு வீடுகள், குழந்தைப் பராமரிப்பு, நல்ல கல்வி போன்ற அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

அவர் முன்வைக்கும் முதன்மையான குற்றச்சாட்டு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காங்கிரஸ் அல்லது மக்களின் பெரும்பான்மையான ஆதரவு இல்லாமல் இந்தப் போரில் ஈடுபட்டுள்ளார் என்பதே. பல கருத்துக்கணிப்புகளின்படி, பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தப் போரை ஆதரிக்கவில்லை என்பதையும் ராபர்ட் ரைக் சுட்டிக் காட்டுகிறார்.

எனவே, இது அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வி என்றும் அவர் கூறுகிறார்.

சரி, அமெரிக்கர்கள் என்ன செய்யவேண்டும் ?!

* அமெரிக்கர்கள் பெரிய அளவில் அமைதியான போராட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

* தேர்தல் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.

* தேர்தல்களில் அதிகமாக வாக்களித்து அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

* சமூகங்களையும் கல்வி நிறுவனங்களையும் அரசின் அழுத்தத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.

மொத்தத்தில், இந்தப் போரின் அழிவுக்கு சரியான தீர்வு ஜனநாயக அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதே என்றும் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார்.

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச்...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் கொண்டு வந்ததே திமுகதான் : நாடகமாடும் திருமுருகன் காந்தி !

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் அறிவித்தபோது, ஈ.வெ.இராமசாமி நினைத்திருந்தால் நண்பர் இராஜாஜியிடம் நட்பு ரீதியாகவே எடுத்துக்கூறி இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வைத்திருக்கலாம். ஆனால், அதுகுறித்து மூச்சே விடவில்லை பெரியார் இராமசாமி. மாறாக, அந்த அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்த அறிக்கை...

ஈரான் போர் : இந்தியாவில் LPG சமையல் எரிவாயுவுக்குக் கட்டுப்பாடு : பதுக்கல்களைத் தடுக்க அத்தியாவசியப் பொருள் சட்டம் அமல்.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் எல்லா நாடுகளிலும் விலை உயர்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் LPG சமையல் எரிவாயுவுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தேவைகள், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கே எரிவாயு உருளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் வணிக...