இஸ்ரேல் கொடுத்த அழுத்தம் காரணமாகப் பொய்யான காரணங்களைக் கூறி ஈரான் மீது போரைத் தொடங்கிவிட்டு படாதபாடு படுகிறது அமெரிக்கா.
கடந்த 20 நாட்களாக நடந்து வரும் இப்போரில் ஈரான் நாடு, அமெரிக்கா மீதோ அல்லது இஸ்ரேல் மீதோ அல்லது வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீதோ முதலில் தாக்குதலை நடத்தவில்லை.
அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப்படைதான் ஈரான் மீது முதலில் தாக்குதல் நடத்தியது.
தாமாக எந்த ஒரு தாக்குதலையும் முதலில் நடத்தாமல் அமைதி காக்கிறது ஈரான். அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப்படை அடித்தால் உடனே திருப்பி அடிக்கிறது.
இதனால் உலக நாடுகளும் இதில் தலையிடமுடியாத நிலை. ஈரான் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்குகிறது என்ன செய்ய முடியும் என்பதே அவர்களின் நிலை.
இப்படிப்பட்ட நிலையில் ஈரானின் அணுசக்தி செறிவூட்டும் நிலையமான நடன்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. நல் வாய்ப்பாக அணுக் கதிர்வீச்சு எதுவும் ஏற்படவில்லை.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நாட்டின் அதி உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள டிமோனா அணுசக்தி செறிவூட்டும் நிலையத்திற்கு மிக அருகில் ஒரு தாக்குதலை நடத்தி எச்சரித்திருக்கிறது ஈரான். இதில் 100 பேர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் பதிலடியால் கலங்கிப்போயிருக்கிறது அமெரிக்காவும், இஸ்ரேலும். இப்போது ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது அமெரிக்கா.
முன்னதாக, ஈரான் மீது தாக்குதல் நடத்த தங்களது தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரிட்டன் அறிவித்த சில மணித்துளிகளில் டியாகோ கார்சியா தீவில் உள்ள பிரிட்டன் – அமெரிக்க கூட்டுத் தளத்தின் மீது ஏவுகணை வீசி எச்சரிக்கைத் தாக்குதல் நடத்தியது ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டியாகோ கார்சியா தீவின் மீது தாக்கும் அளவுக்கு ஈரானிடம் ஏவுகணை உள்ளதை அறிந்து அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமல்லாது பிரிட்டனும் அதிர்ந்துபோய் உள்ளது.

