தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் 23 ம் தேதி நடைபெறுகிறது.
காட்சி ஊடகங்கள் பத்திரிகைகள் ஒருபுறம் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டாலும்கூட பெரும்பாலும் அவை ஒருபக்கச் சார்பாக இருப்பதாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
இந்நிலையில் பக்கச்சார்பு இல்லாமல் செய்திகளை, கள நிலவரங்களை வெளியிடும் பத்திரிகை ஊடகங்கள், பத்திரிகை ஊடகவியலாளர்களின் கணிப்புகள் மக்களுக்கு அவசியமானதாக இருக்கின்றன.
அந்த வகையில் தமிழ் ஊடகம் குழுமம் வெளியிட்ட 2026 தேர்தல் கள ஆய்வு அறிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ் ஊடகம் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர்கள் இது ஒருபக்கச் சார்பு இல்லாத உள்ளது உள்ளபடியான நிலவரத்தைக் காட்டும் அறிக்கை என்று பாராட்டுதல்களைத் தெரிவித்தனர். அதில் இருந்த ஒன்றிரண்டு ஐயங்களையும் சுட்டிக்காட்டித் தெளிவு பெற்றனர்.
அதேபோல, “சென்னை ப்ரெஸ் க்ளப்” அமைப்பை நடத்திவரும் பத்திரிகையாளர் விமலேஸ்வரன் தலைமையிலான CPRO – Current Political Research Organisation அரசியல் ஆய்வு அமைப்பு தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து மேற்கொண்ட கள ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில்,
அதிமுக 121 இடங்களில் வெற்றி பெறும் என்றும்
திமுக 109 இடங்களிலும்
தவெக 5 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

“ஸ்பைடர் மேன்” எனும் தலைப்பில் சுமார் ஆயிரம் பத்திரிகை ஊடகவியலாளர்களைக் கொண்ட 11 குழுக்களை நடத்திவரும் மூத்த பத்திரிகை ஊடகவியலாளர் சீனு என்கிற ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழுவினர் நடத்திய கருத்துக்கணிப்பில்,
அதிமுக 130 இடங்களிலும்
திமுக 90 இடங்களிலும்
தவெக 2 இடங்களிலும்
நாம் தமிழர் 1 இடத்திலும் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்பைடர் மேன் குழுவினரின் கணிப்புகள் ஒவ்வொரு தேர்தலிலும் துல்லியமான முடிவுகளை முன்கூட்டியே தந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

