“விடுதலை இயக்கத்தினரை வைத்து என்னைக் கொ*லை செய்ய வைகோ சதி செய்தார்” என்று குற்றம் சாட்டி திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். அவருக்காக சுமார் ஒன்பது பேர் தீக்குளித்து உயிரை மாய்த்தனர். மு.க.ஸ்டாலினுக்கு பட்டம் சூட்ட வசதியாக தம்மை கருணாநிதி வெளியேற்றியதாக கர்ச்சனை செய்தார் வைகோ. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குடும்பத்தை மோளம் அடிப்பவர்கள் என்று பொது மேடையிலேயே விமர்சனம் செய்தார் வைகோ.
இதெல்லாம் ஒரு காலம்.
பிறகு திரும்பிப்பார்த்தால் “மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்காமல் ஓயமாட்டேன்” அதே சிங்கக்குரலில் கர்ச்சனை செய்துகொண்டு அறிவாலயத்தில் பூனைக்குட்டியாக உருமாறி நிற்கிறார் இப்போது.
திமுக என்கிற கட்சியை ஒழித்தே தீருவேன் என்று வசனம் பேசிய கமல்ஹாசன் அதே திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகி கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜிக்கு வெட்கமே இல்லாமல் வாக்கு கேட்டு பரப்புரை செய்கிறார் கமல்ஹாசன். உலகநாயகன் உலக்கை நாயகனாக மாறி அறிவாலய பூனைக்குட்டி ஆகிவிட்டார்.
முந்திரிக் காட்டில் வீரத்தோடு சுற்றித்திரிந்த “சிறுத்தை” இப்போது அறிவாலயத்தில் பூனைக்குட்டியாகிவிட்டது. தான் பெயர் சொன்ன போது எழுந்து கூட நிற்காமல் அவமானப்படுத்திய பிரேமலதாவுக்க்கு வேலு நாச்சியார் ரேஞ்சுக்கு புகழ் பாடிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் சிறுத்தையாக சுற்றித்திரிந்த இன்றைய பூனைக்குட்டி ! பிரேமலதாவுக்கு வாக்கு கேட்டு பரப்புரை செய்யும் பேச்சாளர் ஆகிவிட்டது சிறுத்தை.
திமுகவை எதிர்த்துத் தொடங்கப்பட்ட விஜயகாந்தின் தேமுதிகவை திமுகவிடமே அடகு வைத்துவிட்டார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா.
இப்படி திமுக குடும்பம் எனும் பெர்முடா முக்கோணத்திற்குள் நுழைந்தவர்கள் காணாமல் போவதில்லை அரண்மனை அடிமைகளாக உருமாறிப் போகிறார்கள் என்பதே வரலாறு !
ஆக……

