HomeIndiaதிட்டமிட்டு அமெரிக்க தளத்தைத்...

திட்டமிட்டு அமெரிக்க தளத்தைத் தாக்கிய இஸ்ரேல் – அதிர்ச்சித் தகவல்

-முகிந்தன் துரைராஜசிங்கம்

ரசியல் மற்றும் ராணுவ வரலாற்றில் “False Flag Attack” என்பது மிகவும் ஆபத்தான ஒரு தந்திரங்களில் ஒன்று.

ஒரு நாடு அல்லது அமைப்பு, ஒரு தாக்குதலைத் தாங்களே நடத்திவிட்டு, அதைத் தங்களுக்குப் பிடிக்காத மற்றொரு தரப்பு செய்ததாகப் பழிபோடும்.

இதன் நோக்கம், உலக நாடுகளின் அனுதாபத்தைப் பெறுவது அல்லது ஒரு பெரிய போரைத் தொடங்குவதற்கான காரணத்தை (Casus Belli) உருவாக்குவது ஆகும்.

செப்டம்பர் 11, 2001 – அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் உலகையே உலுக்கியது. ஆனால், இது ஒரு “False Flag” என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இதன் நோக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் ராணுவத் தலையீட்டை உறுதிப்படுத்துவது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகுதான் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான போர்களில் அமெரிக்கா இறங்கியது. இது இஸ்ரேலின் பிராந்திய எதிரிகளை அழிக்க மறைமுகமாக உதவியது.

“மற்றவர்கள் நமக்காகப் போராட வேண்டும்” என்ற இஸ்ரேலின் நீண்டகால உத்தியின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் உலக நாடுகளைப் போரின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டுத் தளமான Diego Garcia மீது ஏவுகணைகள் பாய்ந்தன.

இந்த ஏவுகணைகள் ஈரானால் ஏவப்பட்டவை என்றும், இது லண்டன் மற்றும் ஐரோப்பியத் தலைநகரங்களைத் தாக்கும் திறன் கொண்ட “Intercontinental Range” ஏவுகணைகள் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரிட்டிஷ் பிரதமர் Keir Starmer-ஐ எச்சரித்தார்.

ஈரான் இந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தது.

ஆனால், ரஷ்யா மற்றும் சீன உளவுச் செயற்கைக்கோள்கள் வெளியிட்ட புகைப்படங்கள் உலகையே அதிரவைத்தன. அந்த ஏவுகணைகள் ஈரானிலிருந்து வரவில்லை; மாறாக கடலுக்கு அடியில் மறைந்திருந்த இஸ்ரேலிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் (Submarine) இருந்து ஏவப்பட்டவை என்று அந்த ஆதாரங்களுடன் உண்மையை போட்டுடைத்துள்ளனர்.

பிரிட்டனை (UK) நேரடியாகப் போருக்குள் இழுத்து, ஈரானுக்கு எதிராகப் போரிட வைப்பதே இஸ்ரேலின் திட்டம் .

அந்த திட்டத்தினை அறிந்த பிரித்தானியா மிகவும் புத்திசாலித்தனமாக சுதாரித்துக் கொண்டுவிட்டது.

இதேபோன்ற ஒரு நாடகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சைப்ரஸிலும் அரங்கேறியது. அங்கு நடந்த ட்ரோன் தாக்குதல்கள் ஈரானுடையது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், விரிவான விசாரணையில் அந்த ட்ரோன்கள் இஸ்ரேலால் ஏவப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டது.

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் (Mossad), தனது இலக்குகளை அடைய எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

இப்போதும் அதே பாணியில் மற்ற நாடுகளைத் தனக்கான போரில் பகடைக்காய்களாக மாற்ற இஸ்ரேல் முயன்று வருகிறது.

இஸ்ரேல் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். உலகில் எந்த ஒரு கெட்ட காரியம் நடந்தாலும் அதன் பின்னால் இஸ்ரேலில் மொசாட் இருக்கும் என நம்பும் மனநிலைக்கு மக்கள் மாறத்தொடங்கி விட்டனர்.

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...