–முகிந்தன் துரைராஜசிங்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அந்த ஒரு பதிவு ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்தது. “அடுத்த 48 மணிநேரத்தில் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாகத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை – குறிப்பாக மிகப் பெரிய நிலையத்தை – அமெரிக்கா தரைமட்டமாக்கும்” என்ற எச்சரிக்கை, ஒரு புதிய உலகப்போருக்கான தொடக்கமாகப் பார்கப்படுகிறது.
ஆனால் ஈரான் “நெருப்புக்கு நெருப்பு” சிறந்த பதிலடி என்பது போல் ஈரான் சற்றும் பின்வாங்கவில்லை.
ட்ரம்பின் மிரட்டலுக்குப் பதிலளித்த ஈரானிய ராணுவத் தளபதிகள், “எங்கள் மின் நிலையங்கள் மீது ஒரு சிறு கீறல் விழுந்தாலும், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களும், இஸ்ரேலின் முக்கிய உள்கட்டமைப்புகளும் சாம்பலாகும்” என அறிவித்தனர்.
அத்துடன் ஈரான் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முழுமையாக மூடிவிடுவதாக அறிவித்தது.
ஈரானின் ‘IRGC ஏற்கனவே நீண்ட தூர ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளன. அமெரிக்காவின் நட்பு நாடுகளின் எண்ணெய் கிணறுகளும் இலக்குகளாக மாற்றப்பட்டன.
உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 20% இந்த நீரிணை வழியாகத்தான் செல்கிறது. இந்த முடக்கம் உலகப் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளும்:
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 150 டாலரைத் தாண்டக்கூடும். இது பெட்ரோல், டீசல் விலையை விண்ணை முட்டச் செய்யும்.
போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால், உணவுப் பொருட்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை அனைத்தின் விலையும் கிடுகிடுவென உயரும்.
உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்திக்கும், பல நாடுகள் பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளப்படும்.
இப்பொழுது புரிகிறதா ட்ரம்ப் எனும் முட்டாளின் முடிவுகள் உலகத்தில் உள்ள அனைவரினது பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கப்பட போகின்றது.
ட்ரம்பின் இந்த 48 மணிநேரக் கெடு ஒரு மிகப்பெரிய “முட்டாள்தனமான நகர்வு” (Stupid Move)
ராணுவத் தளங்களை விடுத்து மின் உற்பத்தி நிலையங்களை (Power Plants) தாக்குவதாகக் கூறுவது சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானது. இது கோடிக்கணக்கான அப்பாவி மக்களை இருளில் தள்ளும் செயலாகும்.
ஈரானைத் தாக்கினால் அது ஒரு நீண்ட காலப் போருக்கு இட்டுச் செல்லும். ஏற்கனவே பொருளாதாரச் சுமையில் இருக்கும் அமெரிக்காவிற்கு இது ஒரு தேவையற்ற மற்றும் தற்கொலைக்குச் சமமான முடிவாகும்.

